Wednesday, 13 February 2013


திட்டித் தீர்க்கின்றாய்(-10 -)
(பாசச் சிறைகள்)

வெடி வெடியாய்
உதடுகள் விரித்து
போர்க்கொடி
உயர்த்துகின்றாய் ...

கொஞ்சல் திட்டல்களில்
கொலைகள்
செய்கின்றாய்
உன் மௌனத்தை
துண்டாக்கி
வார்த்தைகளை
வாழ வைக்கின்றாய் ...!!!

உள்ளே சிரித்து
வெளியே
எரிக்கின்றாய்
எரிதலில்
இன்ப ரணங்களாய்
உதிர்கின்றாய் ...!!!

திட்டித் தீர்க்கின்றாய்
திட்டல்களைத்
தீர்க்கின்றாய்
வாலிபத்தை
வார்க்கின்றாய்
கோபக் கனல் விழியால்
கவிதைகள் சேர்க்கின்றாய்

பாசம் தீப்பிடிக்கையில்
என்ன செய்வாய்
தீராத உன்
சுவாசத்தினால்
சிறைப்பிடித்து விடுவாயா?

No comments:

Post a Comment