பெண்மை உயிர்ப்பு
நேரிய
நெறியுணர்த்தும்-உன்
நீள் வழிப் பயணம்
புதுவழி
சொர்க்கத்தை
உன் இனம்
உணர வைக்க
பெண்ணை
உலகாள வைக்க
காலுறை களைந்த
உன் காலைப்
பாதணிகள்
நெருடுவதைப் போல்
கதியிழந்த
பெண்ணினத்தை
கயவர் உலகம்
சுரண்டுகிறது ...!!!
கருக்கு வேலிகட்கும்
கறைபடிந்த
பாதைகட்கும்
தனிவழிச் சுதந்திரம்
சீராக்கம் ..!!
இங்கு
அண்டாக்களில்
சேமிக்கப்படுகிறது கள்ளிப்பால்..!!
கால்களைப்
பந்தாடும்
கட்டெறும்புகட்கும்
கருணை காட்ட -இங்கே
ஐந்தாவது அகவையில்
அன்னை தெரேசா
பாலினச்
சுரண்டல்கள் மத்தியில்
பால்மணம் மாறாக்
கண்ணீர்ப் பயணம்
பள்ளி நோக்கி
நாளை ஓர் பெண் உயிர்ப்பாள்
பூமியாயும்
புனிதம் கேட்ட
ஆடவர் உயிர் களையும்
சாமியாயும்
சுனாமியாயும் ...!!!
//// இந்தப் புகைப்படம் யார்நகர
கிராமப் புறம் ஒன்றில் எடுக்கப் பட்டதாகும்
இந்தப் புகைப்படத்தை
பதிவாகியவர் எனது அருமை நண்பர் பத்மயன் ஆவர்
இவர் மேலும் இந்தத் துறையில் முன்னேற இறைவனை வேண்டுகின்றேன் /
நேரிய
நெறியுணர்த்தும்-உன்
நீள் வழிப் பயணம்
புதுவழி
சொர்க்கத்தை
உன் இனம்
உணர வைக்க
பெண்ணை
உலகாள வைக்க
காலுறை களைந்த
உன் காலைப்
பாதணிகள்
நெருடுவதைப் போல்
கதியிழந்த
பெண்ணினத்தை
கயவர் உலகம்
சுரண்டுகிறது ...!!!
கருக்கு வேலிகட்கும்
கறைபடிந்த
பாதைகட்கும்
தனிவழிச் சுதந்திரம்
சீராக்கம் ..!!
இங்கு
அண்டாக்களில்
சேமிக்கப்படுகிறது கள்ளிப்பால்..!!
கால்களைப்
பந்தாடும்
கட்டெறும்புகட்கும்
கருணை காட்ட -இங்கே
ஐந்தாவது அகவையில்
அன்னை தெரேசா
பாலினச்
சுரண்டல்கள் மத்தியில்
பால்மணம் மாறாக்
கண்ணீர்ப் பயணம்
பள்ளி நோக்கி
நாளை ஓர் பெண் உயிர்ப்பாள்
பூமியாயும்
புனிதம் கேட்ட
ஆடவர் உயிர் களையும்
சாமியாயும்
சுனாமியாயும் ...!!!
//// இந்தப் புகைப்படம் யார்நகர
கிராமப் புறம் ஒன்றில் எடுக்கப் பட்டதாகும்
இந்தப் புகைப்படத்தை
பதிவாகியவர் எனது அருமை நண்பர் பத்மயன் ஆவர்
இவர் மேலும் இந்தத் துறையில் முன்னேற இறைவனை வேண்டுகின்றேன் /
No comments:
Post a Comment