Wednesday, 13 February 2013


கத்தி உயிர் ஸ்பரிசம்

என்
விலா என்பிடை
உலாப் போ-நீ
நிலா

கடல் ஆழம்
உன் மனம்
கவிதைத்
தாளம் ...!!!

சித்தன் நான்
உயிர்ப்
பித்தம் தரு
பெரு முத்தம்

நதி அசை
அழகுப் பரிசல்
பிரம்மன்
கொடைப் பரிசில்...!!

மதி உயிர்ப்புப்
புத்தி மதி
காதல்
சாணக்கியாள்...

இடைக்
கிரிவலம்
தெறிவில்
நிவாரணி க(ன்)னி

ஆகா
வார்த்தையில்
ஆளும்
யுகம்...!!!

மௌன
இனக் குவியல்
யெளவனச்
சூடெற்றச் சமையல்

பொன்நகை
வறுமை
இடைத் தேசம்
கோடை தரு
மார்கழி
மாசம் ..!!

அசை
ஆற்றின் நடை
அருவிக் கூந்தல்
நயாகரா
வண்ண உலக(ம்)க்
கனா இரா...!!

ஊசி முனை
இடைத்
தீக்காடு
மழலை உரை
குரல்
குயில்ப் பேடு...!!

நா உமிழ்
எச்சில்
தேவ அவிசு
சொற்றிடும்
உன் முன்
அழகின் பவிசு...

உயிர் உரம்
ஏற்றும்
புயல் மரம்...!!

கத்தி உயிர்
ஸ்பரிசம்
மேல் ஆடை
வழித்
தென்றல் ஆடும்
சரசம்...!!!

No comments:

Post a Comment