Wednesday, 13 February 2013

திட்டித் தீர்க்கின்றாய்(-11 -)
(மிஞ்சலில் மிஞ்சல்)

காதல் கொள்ளும்
பொழுதுகளில் 
கர்சிக்கின்றாய் 
காவல்மீறி என்னை
மிஞ்சல் மொழிகளால்
அர்ச்சிக்கின்றாய்

விரிந்த உன் விழிகளோரம்
ஒட்டி உறவாடும்
மனதை
பாதியாய் முறிக்கின்றாய்
ஏனடி
வார்த்தைகளைப்
பொரிக்கின்றாய்...??

திட்டித் தீர்க்கின்றாய்
மிஞ்சல்களை
மிளிரச் செய்கின்றாய்
மஞ்சள் முகத்தில்
வர்ணஜாலம்
அஞ்சல் செய்கின்றாய்

மிஞ்சலில் மிஞ்சல்
நீயாகின்றாய்
நெஞ்சிலே
கொஞ்சம் தீயாகின்றாய்...

No comments:

Post a Comment