Wednesday, 13 February 2013


திட்டித் தீர்க்கின்றாய்(-8-)
(எட்டாம் ஸ்வரம்)

மூச்சு வாங்கல்களில்
மௌனிக்கின்றாய்
அந்நொடி-நான்
மீண்டும் ஒரு கணம்
ஜனனிக்கின்றேன்

ரசனை மிக்க
திட்டல்கள்
காவியம் சொல்லுமா...??

எட்டாவது ஸ்வரம்
சொல்லும்
திட்டல்கள் ஒவ்வொன்றும்
தீக்குள் பிறந்த பனிச்சுவாசம்

திட்டித்தீர்க்கின்றாய்..!!
பெண்ணே
உதடுகள் சுழித்து....
ஒவ்வொரு சுழிப்பிலும்
உன்
வெட்கம் வெளிக்கின்றது

மூக்கை -நீ
கண்களுடன்
இறுக்கிக் கொண்டு
மௌனமாகும் வேளையிலே-என்
பாசம்
இறுக்கிக் கொண்டதுன்
ஆவியிலே...!!

ஸ்வரங்கள் பிறக்கின்றது
மௌனத் திட்டல்கள்
கடினமானதல்ல
கவிதையானது...!!

No comments:

Post a Comment