Wednesday, 13 February 2013


 பெண்ணானவள் (-2 -)
(கடவுள் உரைத்தல்)

திரணம் மேல் பனித்
துகள்கள்
கொஞ்சிடும் வைகறையில்
அவள் மலர்ந்தாள்
மரணமோ எனைப்
பிடித்தது என்று அஞ்சினேன்
அரை நிமிடம் ...!!!

கடவுளாகிய கலைஞன்
நான்...!!
எங்கே எனக்குள்ளும்
பல்லவி சரணங்களை
பொழிகிறது
காதல் கார்மேகம் ...!!

மெல்லியாள் யாரிவளோ?
துடித்திடும்
ஆண்மையை சீண்டிய
பெருநில மங்கை
இவள்
பாலையோ?முல்லையோ?

இந்திரியம்
சொட்டவைக்கும்-அவள்
பாதிரப்பூ வாசம்
மந்திரமோ-இல்லை
நான் தான்
யந்திரமோ...??

குரல் விக்கி...
மூச்சு திக்கி...நான்
கடவுளானவன்
கஸலிஷா
பெண்ணானவள்....!!

(காதலில் உறுதியாய்த் தரித்திருங்கள்
இடை விடாமல் காதல் செய்யுங்கள்-பேறு18:1, சிறவு12:12:1)

No comments:

Post a Comment