Wednesday, 13 February 2013


நானாக்கப்பட்டிருக்கும் நீ

நீயாக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு உணர்வுகளும்
என்னை
ஈர்த்துக் கொண்டிருக்கின்றன
உனது
ஒவ்வொரு அசைவிலும்
இசைவிலும்
நானாக்கப்பட்டிருக்கின்றேன்

கடிகார முட்களிலும்
அது அலறும்
அலார ஓசையிலும்
நீயாக்கப்பட்டிருக்கின்றாய்
நேரக்கடக்கைகளில்
நான்
அதிர்வுகளைப்
புசித்தபடி மௌனிக்கின்றேன்

வாழ்வின்
ஏதோ மூலையிலும்
பயண வளைவுகளிலும்
நீயாக்கப்பட்டிருந்தாய்
வழி விடுதலிலும்
முன்னேறிப்
பின்னேறுதலிலும்
வழிப்போக்கனாகிய
அனுபவங்களுக்காய்
நான் பிரயாணப்படுகின்றேன் ...!!

No comments:

Post a Comment