காற்றின் கனவு (4)
(இறை ஆசை )
குடஜமலர் சூடி குவளை
மலர் ஏந்திக் -குதித்தாடும்
பாதங்களில்
விடயமொன்று தேடியே
வாழ்ந்தேனுயிர் ....!!
அகில் மரங்கள்-துகில்
உரித்து...பச்சை களைந்து
செந்துணர் ஜொலிக்கும்
அவள் பூவிடை
செர்ந்தேனுயிர் ...!!
பெருஞ்செடிவேர்
வளைந்து நின்று யாழாகும்
குன்றிமணி தெறிக்கும்
அவள் இசைக்கும் -விரல்நுனி
சார்ந்தேனுயிர்...!!
மாவிலைக் கச்சிடையே
பஞ்சு மேகமிரண்டும்
கொஞ்சிக்கொள்ளும்
வியர்வைத்துளி நீராய்ப்
படரக்
குளித்தேனுயிர்....!!
இறை காதலுணரா
கஸலிஷா காற்றின்
கனவு-இறையிவன்
நேற்றின்
உணர்வு...!!!
(துன்பங்களின் கண்ணீரை காதல் துடைக்கும் .இனி
மரணமும் இல்லை....துக்கமில்லை...அலறுதலுமில்லை
வருத்தமுமில்லை-உணர்தல்08:12)
(இறை ஆசை )
குடஜமலர் சூடி குவளை
மலர் ஏந்திக் -குதித்தாடும்
பாதங்களில்
விடயமொன்று தேடியே
வாழ்ந்தேனுயிர் ....!!
அகில் மரங்கள்-துகில்
உரித்து...பச்சை களைந்து
செந்துணர் ஜொலிக்கும்
அவள் பூவிடை
செர்ந்தேனுயிர் ...!!
பெருஞ்செடிவேர்
வளைந்து நின்று யாழாகும்
குன்றிமணி தெறிக்கும்
அவள் இசைக்கும் -விரல்நுனி
சார்ந்தேனுயிர்...!!
மாவிலைக் கச்சிடையே
பஞ்சு மேகமிரண்டும்
கொஞ்சிக்கொள்ளும்
வியர்வைத்துளி நீராய்ப்
படரக்
குளித்தேனுயிர்....!!
இறை காதலுணரா
கஸலிஷா காற்றின்
கனவு-இறையிவன்
நேற்றின்
உணர்வு...!!!
(துன்பங்களின் கண்ணீரை காதல் துடைக்கும் .இனி
மரணமும் இல்லை....துக்கமில்லை...அலறுதலுமில்லை
வருத்தமுமில்லை-உணர்தல்08:12)
No comments:
Post a Comment