மந்திர வலி உலகு (கருமை நிற அழகே!!!)
ஏ !
கருவாச்சி -உயிர்
திருகும்
உன் கண் காதல்
கருவாச்சு...!!
மழையாச்சு
துளித்...துளியாய்
பெண்மைத்
தருவாச்சு..??
மலர்
வெடிச் செடியாய்
பூத்தாச்சு
உன் கைப்பிடியில்
வேம்பும்
கரும்பாச்சு...!!
கார்மேகம்
அழகாச்சு-உன்னால்
கருப்பின் மவுசு
மலையாச்சு...!!
துரு துரு
பற்சிரிப்பில்
துருவங்கள் இணைஞ்சாச்சு
துருப்பிடிக்கா
உன் மனது
பொன்னேறு விலையாச்சு
கருங்குவளைப்
பூமேல்க் காதல்
நிலவுக்கு
வரலாச்சு ...!!!
அப்பத்தில்
மிளகைப் போல
ஒட்டிக் கொஞ்சிக்
கட்டியாச்சு ...!!
திரள் குழல்
அழகில்
தீர்த்தம் ஆடியாச்சு -உன்
கரு பெரு
கண்களால் -இதயம்
பொடியாச்சு ...!!
பிரண்டைக்
குழம்பைப் போல்
உன் சொற்கள்
உறைப்பாச்சு...
இலுப்பம் பூவாய்
மௌனம்
இனிச்சாச்சு ...!!
வரன் வேண்டா
உனதழகே கள்ளி
எனக்காச்சு
கரு நிறச்
சிலையழகே வள்ளி
நீ என்றாச்சு ..!!
மந்திர வலி
உலகு
கருமையிலே
கானக்குயில் நீயாச்சு
புன்னகை
பூரிப்பு வழி உனதாச்சு...!!!
ஏ !
கருவாச்சி -உயிர்
திருகும்
உன் கண் காதல்
கருவாச்சு...!!
மழையாச்சு
துளித்...துளியாய்
பெண்மைத்
தருவாச்சு..??
மலர்
வெடிச் செடியாய்
பூத்தாச்சு
உன் கைப்பிடியில்
வேம்பும்
கரும்பாச்சு...!!
கார்மேகம்
அழகாச்சு-உன்னால்
கருப்பின் மவுசு
மலையாச்சு...!!
துரு துரு
பற்சிரிப்பில்
துருவங்கள் இணைஞ்சாச்சு
துருப்பிடிக்கா
உன் மனது
பொன்னேறு விலையாச்சு
கருங்குவளைப்
பூமேல்க் காதல்
நிலவுக்கு
வரலாச்சு ...!!!
அப்பத்தில்
மிளகைப் போல
ஒட்டிக் கொஞ்சிக்
கட்டியாச்சு ...!!
திரள் குழல்
அழகில்
தீர்த்தம் ஆடியாச்சு -உன்
கரு பெரு
கண்களால் -இதயம்
பொடியாச்சு ...!!
பிரண்டைக்
குழம்பைப் போல்
உன் சொற்கள்
உறைப்பாச்சு...
இலுப்பம் பூவாய்
மௌனம்
இனிச்சாச்சு ...!!
வரன் வேண்டா
உனதழகே கள்ளி
எனக்காச்சு
கரு நிறச்
சிலையழகே வள்ளி
நீ என்றாச்சு ..!!
மந்திர வலி
உலகு
கருமையிலே
கானக்குயில் நீயாச்சு
புன்னகை
பூரிப்பு வழி உனதாச்சு...!!!
No comments:
Post a Comment