Wednesday, 13 February 2013


நீ பெரியவளாகிவிட்டாய்

நீ பெரியவளாகிவிட்டாய்
பெரிய மனுசி நீ
உன்னிடம் சில புதிய
குணங்களும்
பூப்படைந்து விட்டது

உன் வயது நிறைந்த
குழந்தைத் தனங்கள்
காணாமல் போய் விட்டது
இன்றெல்லாம்
நீ நீயாகவே
நடந்து கொள்கிறாய்

நாம் அன்று
குடிசை அமைத்து
சமைத்து விளையாடிய
மண்சட்டிகள்
வயதுக்கு வந்திருந்தால்
என் நிலை என்னவாயிருக்கும் ..??

துடுக்குத் தனங்களையும்
துடிப்புகளையும்
உன் தாவணி
ஒளித்துக்
கொண்டிருக்கின்றது

அன்று
கொஞ்சல் பூசும்
முகங்களில் இன்றெல்லாம்
மஞ்சள் பூசிக்கொள்கிறாய்
கூடவே
வெட்கங்களையும் சேர்த்து...!!

உன்
சிறுபிள்ளைத்தன
விளையாட்டுக்களை
நான் மீண்டும் தேடுகின்றேன்
இந்தப் பூப்படைதலில்
அவை எங்கு
புதைக்கப்பட்டனவோ???

No comments:

Post a Comment