Wednesday, 13 February 2013


தேவதையாய் நீயோ
தேவதையாய்
தீவதையாய் என் காதல்
தீவதையாய்

மார்கழியாய் உயிர் நீ
மார்கழியாய்
மடப்பலியாய் நானோ
மடப்பலியாய்

பூங்காற்றாய் பெண்ணே
பூங்காற்றாய்
புயல்நாற்றாய் என் மனம்
புயல்நாற்றாய்

ஓவியமாய் உன் அழகோ
ஓவியமாய்
காவியமாய் என் பாதை
காவியமாய்

நிலவில் ஒன்றாய் உன் வதனம்
நிலவில் ஒன்றாய்
இலவம் பஞ்சாய் என் கால்கள்
இலவம் பஞ்சாய்

பூம் பாவையாய் அழகோ
பூம் பாவையாய்
முட்பாதையாய் என் வாழ்வு
முட்பாதையாய்

இதற்காய் எதையும் செய்வேன்
உனக்காய்
எதற்காய் எனை வெறுத்தாய்
எதற்காய் ?

No comments:

Post a Comment