Wednesday, 13 February 2013


திட்டித் தீர்க்கின்றாய்(-4-)
(திட்டல்கள் தீராது...)

திட்டித் தீர்க்கின்றாய்
ஆசையுடன்
பாசமாய்...!!

உச்ச செவிப்பறை
நாண்களை
மிச்சமின்றி அதிரச்
செய்கிறாய்

அந்தத் திட்டல்களில்
நீயும்
கொஞ்சல் அதிரசமாய்
இனிக்கிறாய்
தொடர்கிறாய்

எதிர்பாராப் பொழுதுகளில்
யாசகனுக்கு
அதிர்ஷ்டம் அடித்தால்
எப்படியிருக்கும்...!!
ம்ம்ம்.....தொடரு
உன் திட்டல்களை

வார்த்தை
முத்துக்களை விழுங்கி
சிப்பியாகிப் போகின்றன
என்
சின்னச் செவிகள்

திட்டிவிடு
திட்டிவிடு...
திட்டிக்கொண்டே
உன் அக்கறைகளை
என் மேல் கொட்டிவிடு...!!

நிறுத்தாதே
மூச்சு வெடித்து
நான் முழுமையாகிறேன்
திட்டிவிடு....!!!

No comments:

Post a Comment