Wednesday, 13 February 2013


திட்டித் தீர்க்கின்றாய் (-6-)
(திட்டல் சுவை)

பரவசத் திட்டல்கள்
பிறக்கின்றன ...!!!

உன் திட்டல் மார்க்கம்
புனிதமானது
புதினமானது...!!
நால் வகையில் நா
இசைக்கின்றாய் ...

கொஞ்சல் திட்டல்
மிஞ்சல் திட்டல்
கோபத் திட்டல்
கண்ணால் கண்ணை
எரித்துவிடுவதைப் போல்
சபதமிட்டுத் திட்டுவாயே-அந்த
மௌனத் திட்டல் ..!!

திட்டித் தீர்க்கின்றாய்
எங்கே கற்றுக்கொண்டாய்
சொற்களால்
இதயத்தில் சுழியோட ..!!

திட்டல் சுவை பிறக்கின்றது
என்
புசிப்புகள் அடங்கி
விடவில்லை ....
எச்சில் விழுங்கல்
நின்றபாடில்லை...!!

No comments:

Post a Comment