Wednesday, 13 February 2013


கருவில் நானழுதால்
கணத்திலவள் கண்கலங்கும்
உதரம் நான் உதைத்த போது-தன்
உதிரம் தந்த உத்தமியாள்
குணம் மாறா உக்களியாள்

கண்களிலே கோபமில்லை -அவள்
பாசத்தில் பாசாங்கில்லை
நெஞ்சிலே வஞ்சமில்லை -என்னை
பிஞ்சிலே காக்கும் தெய்வக்
குணத்திற்கோ ஈடு இல்லை

மிஞ்சினால் கொஞ்சமாய்த் -தன்
அன்பிலே வஞ்சிப்பாள்
அஞ்சினால் எனைத் தூக்கி
கொஞ்சியே பயம் தீர்ப்பாள்-நிஜக்
காதலின் கருத்துரைப்பாள்

உண்மையினை வளர்த்திடுவாள்
பொய்மையினை உணர்த்திடுவாள்
காரணங்கள் சொல்லாமலே
கண்களாலே கடிந்திடுவாள்-பின்
கரத்தினால் கனியவைப்பாள்

மீசை அரும்பும் வயதில்க் கூட
அவள் பாசம் அறுந்திடாது
சம அன்பைக் காட்டிடுவாள் -தீய
சரித்திரத்தை மாற்றி வைப்பாள்
சஞ்சலமின்றிய சாதனையாள்

என் வெற்றிகளில் பெருமைப்படும்
முதல்ப் பெண் நீர்-என் தோல்வி கண்டு
சிந்திடுவீர் முதற்க் கண்ணீர்
என் ஆயுள் தரத் தயங்க மாட்டேன்
தாயே நீர் ஆண்டு நூறு வாழி!!!

No comments:

Post a Comment